கண்டதும் காதல் பூக்க குறைந்தது 8.4 வினாடியாவது பார்க்க வேண்டும். அது விதியின் சதி. நினைத்து பாருங்கள், இருவரும் தொடர்ச்சியாக செய்துவந்த காரியத்தில் ஏதேனும் ஒன்று கூடியிருந்தாலோ குறைந்திருந்தாலோ கண்டதும் காதல் பூக்க வைப்பே இல்லாமல் போயிருக்கும்.
இப்படி பூத்த காதலில் ரோஜாவை முள் காயம் செய்தால் நியாயமா?
இன்பமயமான காதலில் ஒருவருக்கொருவர் கொடுத்துக்கொள்ளும் துன்பங்களை இங்கே காணலாம்.
காதலில் பெரும்பாலானவை வீட்டிற்கு தெரியாமல் ரகசியமாக இருப்பவை. ஒரு காதலர், மற்றொருவருக்கு தொலை பேசி முலமாக தொடர்பு கொள்ளும்போது, முத்தம் கேட்பது. வீட்டில் அனைவரும் இருக்கின்றனர் என்று அறிவித்த பின்னும் அல்லது மெதுவாக கொடுத்த பின், "என்ன? கொசுகடிசாப்ல இருக்கு? நன்னா குடு." அப்படிங்கறது. நாமே அவர்களை காட்டிகொடுத்து துன்பத்திற்கு உள்ளாக்கலாமா?
இவ்வாறு தனக்கு பிடித்த விஷயங்களை பற்றியே, அது அவர்களுக்கு பிடிக்கிறதா? இல்லையா? என்று கவலை இல்லாமல் பேசுவது.
போன் செய்துவிட்டு, விஷயமே இல்லாமல் பேசுவது அல்லது பேசாமலேயே இருப்பது.
அவர்களுக்கு பிடிக்காத விஷயங்களை செய்துவிட்டு மன்னிப்பு கேட்டுவிட்டு தனக்கு பிடிக்காதவற்றை அவர்கள் செய்யும்போது தாறுமாறாக கத்துவது.
இப்படி பல சொல்லிக்கொண்டே போகலாம். காதலில் என்ன செய்யவேண்டும் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை பார்க்கவும்.
சரி, காதலை முதன் முதலில் சொல்லும்போது செய்யும் கோமாளித்தனங்களை பற்றி பாப்போம்.
பிடித்திருந்தால் நேரடியாக சொல்லவேண்டியது தானே? அதை விட்டுவிட்டு அவள் போகும்போதும் வரும்போதும் சினிமா பாட்டு பாடினால்? அந்த பாட்டை பட்டிய நினைவு தான் வரும். அதை போல, அவளிடம் பேசுவது போல தங்கள் நண்பர்களிடம் அவள் வரும்போது பேசுவது (ஜாடையாக). சிலருக்கு இது பிடிக்காது.
நடந்து வரும்போது கம்பீரமாக வந்துவிட்டு, அருகில் வந்து பேசும்போது, தடுமாறினால்? மூக்கில் சிகப்பு உருண்டை அணியாத கோமாளி போலிருக்கும்.
காதலை சொல்லும் போது தங்கள் படிப்பு, தொழில், வருமானம் மற்றும் சொத்துகள் பற்றி பேசக்கூடாது. அவள், இதைப் பற்றியெல்லாம் கவலை படுவதில்லை. உலகில் யாரும் நேசிக்க முடியாத அளவுக்கு நேசிக்கிறானா? என்பதை மட்டுமே அவள் கருத்தில் கொள்கிறாள்.
காதலை சொல்வது எப்படி என்று இந்த பதிவிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
இப்படி பூத்த காதலில் ரோஜாவை முள் காயம் செய்தால் நியாயமா?
இன்பமயமான காதலில் ஒருவருக்கொருவர் கொடுத்துக்கொள்ளும் துன்பங்களை இங்கே காணலாம்.
காதலில் பெரும்பாலானவை வீட்டிற்கு தெரியாமல் ரகசியமாக இருப்பவை. ஒரு காதலர், மற்றொருவருக்கு தொலை பேசி முலமாக தொடர்பு கொள்ளும்போது, முத்தம் கேட்பது. வீட்டில் அனைவரும் இருக்கின்றனர் என்று அறிவித்த பின்னும் அல்லது மெதுவாக கொடுத்த பின், "என்ன? கொசுகடிசாப்ல இருக்கு? நன்னா குடு." அப்படிங்கறது. நாமே அவர்களை காட்டிகொடுத்து துன்பத்திற்கு உள்ளாக்கலாமா?
இவ்வாறு தனக்கு பிடித்த விஷயங்களை பற்றியே, அது அவர்களுக்கு பிடிக்கிறதா? இல்லையா? என்று கவலை இல்லாமல் பேசுவது.
போன் செய்துவிட்டு, விஷயமே இல்லாமல் பேசுவது அல்லது பேசாமலேயே இருப்பது.
அவர்களுக்கு பிடிக்காத விஷயங்களை செய்துவிட்டு மன்னிப்பு கேட்டுவிட்டு தனக்கு பிடிக்காதவற்றை அவர்கள் செய்யும்போது தாறுமாறாக கத்துவது.
இப்படி பல சொல்லிக்கொண்டே போகலாம். காதலில் என்ன செய்யவேண்டும் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை பார்க்கவும்.
சரி, காதலை முதன் முதலில் சொல்லும்போது செய்யும் கோமாளித்தனங்களை பற்றி பாப்போம்.
பிடித்திருந்தால் நேரடியாக சொல்லவேண்டியது தானே? அதை விட்டுவிட்டு அவள் போகும்போதும் வரும்போதும் சினிமா பாட்டு பாடினால்? அந்த பாட்டை பட்டிய நினைவு தான் வரும். அதை போல, அவளிடம் பேசுவது போல தங்கள் நண்பர்களிடம் அவள் வரும்போது பேசுவது (ஜாடையாக). சிலருக்கு இது பிடிக்காது.
நடந்து வரும்போது கம்பீரமாக வந்துவிட்டு, அருகில் வந்து பேசும்போது, தடுமாறினால்? மூக்கில் சிகப்பு உருண்டை அணியாத கோமாளி போலிருக்கும்.
காதலை சொல்லும் போது தங்கள் படிப்பு, தொழில், வருமானம் மற்றும் சொத்துகள் பற்றி பேசக்கூடாது. அவள், இதைப் பற்றியெல்லாம் கவலை படுவதில்லை. உலகில் யாரும் நேசிக்க முடியாத அளவுக்கு நேசிக்கிறானா? என்பதை மட்டுமே அவள் கருத்தில் கொள்கிறாள்.
காதலை சொல்வது எப்படி என்று இந்த பதிவிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
This entry was posted
on Monday, June 23, 2014
at 6:01 PM
and is filed under
அத்யாயங்கள்
. You can follow any responses to this entry through the
comments feed
.